Site icon Tamil News

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது.

முன்னதாக 2 முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகைதுறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.

Exit mobile version