Site icon Tamil News

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நதீம் : புகைப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் புதிதாக முடிசூடிய ஈட்டி எறிதல் சாம்பியனான அர்ஷத் நதீமை ஆச்சரியப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், சமூக ஊடகங்களில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஸ்டேட் டி பிரான்ஸில் சமீபத்தில் முடிவடைந்த ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நதீம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் நதீம் பாகிஸ்தானுக்கு தங்கப் பதக்கத்தை வென்றுக் கொடுத்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அவர் குறித்த போட்டியில் பங்குபற்றியபோது 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதை  பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவை அறிந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, ஷெரீப்பை அழைத்து புகைப்படத்தை நீக்குமாறு வலியுறுத்தினார்.

ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் பரிசுத் தொகையுடன் விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு சிரமப்படலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version