Site icon Tamil News

அமெரிக்காவில் தர்பூசணிக்குள் சிக்கிய மர்மம் – குழப்பத்தில் அதிகாரிகள்

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தர்பூசணிப் பழங்களுக்குள் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தர்பூசணிப் பழங்களு இருந்த கனரக வாகனத்தில் methamphetamine போதைப்பொருள் மறைத்துக்கொண்டு செல்லப்பட்டதை அமெரிக்க எல்லை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 5 மில்லியன் டொலருக்கும் அதிகமெனத் தெரிவிக்கப்பட்டது.

2 வகையான பச்சை வண்ணம் பூசப்பட்ட பைகளில் போதைப்பொருள்கள் மடிக்கப்பட்டிருந்தன. உண்மையான தர்பூசணிப் பழத்தைப்போல் பொட்டலம் தெரிய அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை உண்மையான தர்பூசணிப் பழங்களுக்கு மத்தியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. 2 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எல்லைகளைக் கடக்கும்போது காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கிடையே போதைப்பொருளை மறைத்துக் கடத்துவது வழக்கமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version