Site icon Tamil News

டிரம்ப்பை குறி வைக்கும் மர்ம நபர்கள் – அமெரிக்க ஜனாதிபதியே காரணம் என குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் செய்துவரும் பொய் பிரச்சாரமே காரணம் தன் மீதான கொலை முயற்சிக்கு காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு முக்கிய காரணம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் டிரம்ப் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது, புதர்களுக்கு மத்தியில் மறைந்திருந்து ஏ.கே.47 துப்பாக்கியால் அவரை சுட முயன்றதாக கூறி, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த நபரின் சமூக வலைத்தள பதிவுகளை வைத்து பார்க்கும்போது அவர் ஜோ பைடனின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என பைடனும், கமலா ஹாரிஸும் கூறிவருவதை நம்பியே தன்னை கொல்ல சிலர் முயற்சிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version