Site icon Tamil News

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட mpox தொற்றாளர் – தயார் நிலையில் இலங்கை

இலங்கை எம் பொக்ஸ் (mpox) எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

குறித்த நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டார்.

அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் எம் பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version