Site icon Tamil News

வயநாடு செல்லும் எம்.பி. ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டமையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது.

இத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார்.

இந்த நிலையில் அவர் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும், நாளையும் திட்டமிட்டு உள்ளார். முன்னதாக ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் பயணம் செய்யவுள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் உதகை அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குகிறார்.

பின்பு 1 மணியளவில் முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அம்மக்களிடம் கலந்துரையாடுகிறார்.

இதன்பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார். முன்னதாக வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version