Site icon Tamil News

ஓய்வு குறித்து தொகுப்பாளருக்கு பதிலளித்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி. இவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து டோனி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

நாணய சுழற்சியின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல்,மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? என டோனியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த டோனி, இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்,ஆனால், நான் முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.

உடனடியாக டேனி மோரிசன் டோனியைப் பார்த்து, நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பீர்கள் எனக்கு தெரியும் என்றார்.

அதன்பின் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், டோனி மீண்டும் வருவார்.. டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார் என கூறினார்.

Exit mobile version