Site icon Tamil News

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்!

‘மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண,  காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருடன் இணைந்தே இந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசாலும் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம் எடுக்கலாம் என்றும் எனவே தான் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version