Site icon Tamil News

பிரேசிலில் மகளுக்கு தாய் செய்த கொடூரம் – குளிர்சாதன பெட்டியில் மீட்கப்பட்ட உடல்

பிரேசிலில் மகளை கொன்ற தாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் தனது மகளை கொன்று உடலை பாகங்களாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்பது வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சாவ் பாலோவில் உள்ள அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூத் புளோரியானோ (30) என்ற பெண் ஒகஸ்ட் 26 அன்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூத் புளோரியானோ என்ற பெண், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 9ஆம் திகதி வரை போதைப்பொருளை உட்கொண்டு சிறுமியை கொன்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தந்தையை பிரிந்ததை ஏற்க முடியாமல் தான் மகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் முன் கூறியுள்ளார்.

அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

ரூத் புளோரியானோ தனது மகள் அலனி சில்வாவின் உடல் உறுப்புகளை வெட்டுவதற்கு எளிதான வழியைக் கண்டுபிடிக்க இணையத்தில் தேடியதாக பிரேசில் சிவில் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தந்தையை பிரிந்ததை ஏற்க முடியாமல் ரூத் ஃப்ளோரியானோ கொலை செய்ததாக மகள் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

Exit mobile version