Site icon Tamil News

பின்லாந்திற்கு தப்பிச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள்!

ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ரஷ்யர்கள் பின்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்களை என்ன செய்வது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிக்காட்டுதலுக்காக நாடு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இராணுவக் கடமைகளைத் தவிர்ப்பதற்காக இதுவரை மொத்தம் 1,109 ரஷ்ய குடிமக்கள் பின்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஃபின்லாந்து குடிவரவு சேவை தெரிவித்துள்ளது.

தஞ்சம் அடைவது பற்றி எந்த முடிவும் எடுப்பதற்கு முன், கட்டாய ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய ரஷ்யர்களின் தலைவிதி குறித்து  ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பின்லாந்து எதிர்பார்த்து காத்திருக்கிறது.

“புகலிடம் தொடர்பான முடிவுகளை எங்களால் வெளியிட முடியவில்லை,” என்று பின்லாந்து  உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு இயக்குனர் சன்னா சுட்டர், தெரிவித்துள்ளார்.

Exit mobile version