Site icon Tamil News

பாகிஸ்தானில் 2024 இல் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்!

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், பாகிஸ்தானில் 1,630 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு அரச சார்பற்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் 862 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், 668 ஆட்கடத்தல், 82 காணாமற்போதல் மற்றும் 18 குழந்தைத் திருமணச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version