அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் முதன்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிலர் தானாகவே குணமடைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மயங்கி விழுந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.