Site icon Tamil News

கடந்த 10 மாதங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடந்த 10 மாதங்களில் 1,638 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 1,733 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகளவிலானோர் பாதசாரதிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “இறந்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 1,733 பேரில் 540 பேர் பாதசாரிகள். மேலும், 543 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இறந்துள்ளனர்.

எனவே, இவ்வாறு சாலையில் பயணிக்கும் இந்த அப்பாவி மக்கள் மீது கவனம் செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொள்கிறோம். பாதசாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எனவே, பாதசாரிகளாகிய நீங்கள் சாலையில் செல்லும்போது கவனமாக இருங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version