Site icon Tamil News

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மோடி அரசு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் செலவினங்களை உயர்த்தும் வருடாந்திர பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றியுள்ளார்.

குறித்த உரையில், வேலைகள், பயிற்சி மற்றும் சிறு வணிகங்கள் மூலம் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார்.

இந்தியாவின் பணவீக்க விகிதம் நிலையானது மற்றும் அரசாங்கத்தின் 4% இலக்கை நோக்கி நகர்கிறது என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 8.2% விகிதத்தில் வளர்ச்சியடைந்தது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் விதிவிலக்காகத் தொடர்கிறது, மேலும் வரும் ஆண்டுகளில் அதுவே இருக்கும்” என்று சீதாராமன் கூறினார்.

பிரதமராகப் பதவியேற்ற ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வளர்ச்சியைத் தக்கவைக்க அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அழுத்தத்தில் மோடி தலைமையிலா அரசாங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version