Site icon Tamil News

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை!

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தூண்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மைகளை விளக்கிய பின்னரே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version