!சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) அரசாங்கம் 20 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
உபகாரச் சமபளத் திட்டங்கள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறையில் திறனாளர்களைப் பேணிவளர்க்க அடுத்த 3 ஆண்டுகளில் அந்த முதலீடு செய்யப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் 100 பேருக்கு உபகாரச் சம்பளத்தை வழங்கத் திட்டமிடுவதாக அவர் கூறினார். சிங்கப்பூர் அதன் AI திறனாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த அது எண்ணுகிறது.