Site icon Tamil News

முதலைக்குட்டியை இளவரசியாக பாவித்து திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் பழங்கால நம்பி்கையின் படி இயற்கையின் அருளை பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டார்.

மெக்சிகோவின் தெற்கே அமைந்துள்ள ஓக்சாக்கா மாகணத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் மொழி,கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இயற்கையின் பிரதிநிதியாக முதலையை கருதும் அவர்கள் அதனுடன் மனிதனுக்கு திருமணம் செய்துவைத்தால் இயற்கை வளங்கள் பெருக்கும் என பலநூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதன்படி 7 வயது முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து அதற்கு திருமண ஆடை அணிவித்து சான் பெத்ரோ ஹூவாமெலூவா நகர மேயர் விக்டர் சோசா திருமணம் செதுகொண்டார்.

Exit mobile version