Site icon Tamil News

தெற்கு பிலிப்பைன்சின் மலைப்பகுதியில் பாரிய நிலச்சரிவு.. ஐவர் உயிரிழப்பு!

தெற்கு பிலிப்பைன்சின் மலைப் பகுதியில் மழை காரணமாக நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மின்டானோ தீவில் உள்ள ஒரு சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்தன. மேலும் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச சென்ற இரண்டு பேருந்துகளும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது

Exit mobile version