Site icon Tamil News

கொழும்பில் பாரிய தீ விபத்து – பரிதாபமாக உயிரிழந்த நபர்

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதாகொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குள் 90 வயது முதியவர் ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்தவர் மாத்திரம் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version