Site icon Tamil News

கஜகஸ்தானில் 16 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ விபத்து – குழந்தைகளை தூக்கி வீசிய பெற்றோர்

கஜகஸ்தான் நாட்டில் 16 மாடிக் கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் பெரும் முயற்சி எடுத்து வந்தனர்.

அப்போது 5வது மற்றும் 6வது தளத்தில் இருந்த சிலர் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து கீழே வீசியுள்ளனர்.

தாங்களும் மாடிகளில் இருந்து குதித்தனர். அவர்களை கீழே நின்றிருந்த பொதுமக்கள் போர்வை மற்றும் மெத்தைகள் கொண்டு லாவகமாகப் பிடித்து காப்பாற்றினர்.

எரியும் கட்டடத்தில் இருந்து 300 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காயமடைந்த 16 குழந்தைகள் உள்பட 31 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Exit mobile version