Tamil News

யாழில் ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதன்படி வெளிமாவட்டங்களில் இருந்து நிகழ்வுகளுக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகளை அழைத்து வரும்போது வனவள திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதியின்றி யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதையும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version