Site icon Tamil News

தென்கொரியாவில் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த நபர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்

தென்கொரியாவில் தரையிறங்கும் முன் Asiana விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த நபரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அந்தச் சம்பவம் விமானத்தில் இருந்த சுமார் 200 பேருக்குப் பீதியை ஏற்படுத்தியது.

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 9 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

விமானம் தரையில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அந்த ஆடவர் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டதாகவும், அண்மையில் வேலையை இழந்ததால், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

அந்த ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதைக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version