Site icon Tamil News

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா – 4.97 லட்சம் மக்கள் பாதிப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் மழையால் சுமார் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டித் தீர்த்த கனமழையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்மாகாணத்தின் 43 மாவட்டங்களில் பெய்த மழையால் சுமார் 67 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version