Site icon Tamil News

சிங்கப்பூரில் புதிய நடைமுறை – சம்பளத்தில் 600 டொலர் கூடுதலாக அரசாங்கம் செலுத்தும்

சிங்கப்பூரில் வேலை தேடும் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தில் 20 சதவீத தொகையை அரசாங்கம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வேலை தேடும் போது அவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனத்துக்கு அந்த உதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைக்கு சேர்ந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து 9 மாதங்களுக்கு அந்த உதவித்தொகை ஊழியர்களுக்கு சென்றடையும்.

அவர்கள் 13 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மாத சம்பளம் 4000 டொலருக்கும் குறைவாக பெறுபவராக இருக்க வேண்டும்.

சிறையில் இருந்து விடுதலையானவர்கள் வேலை தேடுவதில் உள்ள சிரமத்தை போக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version