மத்திய லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில் மீது கார் மோதியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருநகர காவல்துறையைச் சேர்ந்த ஆயுதமேந்திய அதிகாரிகள் குற்றவியல் சேதம் குறித்த சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்தில் ஒருவரைக் கைது செய்தனர்,
மேலும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மனநலச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை பயங்கரவாதம் தொடர்பானதாக கருதவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.