Site icon Tamil News

டொராண்டோவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!!! தீப்பிடித்து எரிந்த வாகனம்

டொராண்டோவின் மேற்கு முனையில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை 7:45 மணியளவில், நெடுஞ்சாலை 401 க்கு தெற்கே, உள்ள வெஸ்டன் சாலையில் பல வாகனங்கள் மோதியதாக வந்த செய்திகளுக்கு டொராண்டோ பொலிசார் பதிலளித்தனர்.

டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் கார் நொறுங்கியது. மூன்றாவது வாகனமும் விபத்தில் சிக்கியது.

30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று துணை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட வாகனம் ஒன்று தீப்பிடித்தது. இதையடுத்து தீ அணைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஓக்கில் வெஸ்டன் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

Exit mobile version