Site icon Tamil News

கம்பஹா-கடவத்தையில் CID அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து நபர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொலிஸ் பரிசோதகர் (IP) போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணிடம் இருந்து 25,000 கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடவத்தையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாக கூறி அவரிடம் பணத்தை கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்படி, மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை பொலிஸாரால் சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி அடையாள அட்டை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

33 வயதான சந்தேக நபர் மபிம, ஹெய்யன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.

Exit mobile version