Site icon Tamil News

திருகோணமலையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும், மொரவெவ பொலிஸாரும்- கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடனும் குறித்த சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பல நாட்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 45 வயதான நைசர் என்றழைக்கப்படும் முஹம்மது ஹாசீம் பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version