Site icon Tamil News

நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த நபர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்ய முயற்சித்த நபர் இன்று மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வீரகட்டிய பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன்படி, சந்தேக நபர் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்ததற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Exit mobile version