Site icon Tamil News

நண்பரின் இரண்டு வயது மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

02 வயது 05 மாத சிறுமியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அலோபோமுல்ல பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அருக்கொட அலோபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயும் தந்தையும் தமது நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக அலோபோமுல்ல பிரதேசத்தில் உள்ள இடமொன்றுக்கு சென்றுள்ளனர்.

சிறுமி உறங்கிக் கொண்டிருந்ததால், சிறுமியை காரில் விட்டுவிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர், அப்போது சந்தேகநபரின் நண்பர் சிறுமியிடம் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்று காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அலோபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version