Site icon Tamil News

மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

கொம்பனி வீதி மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொம்பனி வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாக கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணத்தின் ஊடாக இந்த தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, கொம்பனி வீதி பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று (20) கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

மஹிந்த கஹந்தகம முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version