Site icon Tamil News

420 கர்ப்பிணித் தாய்மார்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் நிதியுதவி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் வழங்கப்பட்டது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மகிந்த ராஜபக்ச மற்றும் வந்திருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகா சங்கரத்னய பிரித் ஓதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இதேவேளை, நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால், நிகழ்வின் பின்னர் வெளியில் வந்த மகிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தனக்கு எதுவும் தெரியாது என்றும், வேறு ஒருவர் ஏற்பாடு செய்திருந்த தான நிகழ்வுக்கு தான் வந்ததாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version