Site icon Tamil News

இலங்கையின் வடபகுதி மக்களுக்கு ஆதரவளிக்கும் சீனா

வடபகுதி மக்களுக்கான நிவாரணங்களை சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு.சி.சென் ஹொன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மதத் தலைவர்களைச் சந்தித்த சீனத் தூதுவர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வடக்கிலுள்ள மீனவர்களுக்கு உலர் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்களை மக்களுக்கு வழங்கினர்.

பின்னர் யாழ்.மாவட்டத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்களுக்கு கண்காணிப்புப் பயணத்தையும் மேற்கொண்டார்.

பின்னர் மன்னாரில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் மன்னாரில் மீள்குடியேறிய மீனவர் குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மீன்பிடி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சீன அரசாங்கத்திடமிருந்து வசதிகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்டமாக, எதிர்காலத்தில் மேலும் பல சலுகைகளை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சென் ஹான் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version