Site icon Tamil News

மகாராஷ்டிரா- வெடிமருந்து ஆலையில் வெடிவிபத்து… 9 பேர் உடல் சிதறி பலி!

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாக்பூர் அருகே பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் இன்று காலை பேக்கிங் செய்யும்போது திடீரென தீப்பற்றி அதன் மூலம் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நாக்பூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தலைமையிலான பொலிஸாரும், உள்ளூர் தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் முயற்சிகளிலும் உள்ளிருந்த பணியாளர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மொத்தம் எத்தனை பேர் அங்கு பணியில் இருந்தார்கள் அவர்களில் எத்தனை பேர் வெளியேறினார்கள் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. மற்ற தொழிலாளர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version