Site icon Tamil News

மஹர சிறைச்சாலை கலவர விவகாரம் : சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு!

மஹர சிறைச்சாலையில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி தாக்கல் செய்த மனுவிற்கு அமைய மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து  சந்தேக நபர்களையும் கைதுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவிடுமாறு மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

கைதிகளின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட வெலிசர நீதிவான்  இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரியிருந்தார்.

இருப்பினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்,  இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version