Site icon Tamil News

11 நாட்களுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மடீரா காட்டுத்தீ

போர்ச்சுகல் தீவான மடீராவில் 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த ஒரு பெரிய காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கிய தீ, 5,000 ஹெக்டேர் க்கும் அதிகமான தாவரங்களை எரித்துள்ளது.

தீ இப்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,

ஆனால் இன்னும் அணைக்கப்பட்டதாகக் கருத முடியாது, எனவே மீண்டும் தீ பரவுவதற்க்கான சாத்தியமான விளைவுகளை தடுக்க அணிகள் தரையில் விழிப்புடன் இருக்கும்” என்று பிராந்திய சிவில் பாதுகாப்புத் தளபதி அன்டோனியோ நூன்ஸ் தெரிவித்தார்

அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ளிட்ட பாதகமான வானிலையால் தீப்பிழம்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தடைபட்டுள்ளன.

Exit mobile version