Site icon Tamil News

ஸ்பெயினில் தனது வீட்டை புதுப்பித்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

ஸ்பெய்னில் தனது வீட்டை புதுபிக்க முயன்ற நபர் ஒருவருக்கு 47 ஆயிரம் பவுண்ட்ஸ் கிடைத்துள்ளது.

வடமேற்கு ஸ்பெயினில் உள்ள லுகோவில் நபர் ஒருவர் வீடொன்றை புதிதாக கொள்வனவு செய்து அதனை புதுப்பிக்க முயன்றுள்ளார்.

இதன்போது வீட்டின் சுவர்களுக்குள் பக்குவமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 47 ஆயிரம் பவுண்ட்ஸ் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆனால் அந்த பணத்தை பார்த்தவுடன் அவருடைய மகிழ்ச்சி மறைந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது கிடைக்கப்பெற்ற பணம் அனைத்து தற்போது புழக்கத்தில் இல்லை.

ஸ்பெயின் வங்கி அவற்றை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியதால், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அவர் தவறவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அதில் இருந்த சில பணத்தை மட்டும் மாற்றி வீட்டின் கூரையை புதுப்பித்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version