கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் இன்று (26.08) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அணைப்பதற்கு 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தில் முன்னதாக தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததாக கூறப்படுகிறது.
2023 இல் இருந்து ஒரு திட்டமிடல் விண்ணப்பம், கட்டிடம் “இணக்கமற்ற” உறைப்பூச்சுடன் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.