Site icon Tamil News

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதிக்கு பூட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்திற்கு அருகில் சென்ற மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6 பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புத்தடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மற்றுமொரு மாணவர்கள் குழு உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஒழுக்காற்று சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version