Site icon Tamil News

பிரான்ஸில் பேருந்து வரும் வரை காத்திருந்த சிறுவனின் இதயத்துடிப்பை நிறுத்திய மின்னல்!

பிரான்ஸில் பேருந்துக்காக காத்திருந்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

பிரான்ஸின் தென்கிழக்கு பிராந்தியமான Beausset, (Var) நகரில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

15 வயதுடைய சிறுவன் ஒருவன் பேருந்து தரிப்பிடம் ஒன்றில் காத்திருந்த போது திடீரென அவன் மீது மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு இதயத்துடிப்பு நின்றுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் மீட்புப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்.

ஹெலிகொப்டர் அழைக்கப்பட்டு சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறுவன் தொடருந்தும் உயிராபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version