Site icon Tamil News

பெர்டியன்ஸ்கில் உள்ள துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் – 9 பேர் காயம்!

பெர்டியன்ஸ்கில் உள்ள ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட துறைமுகத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் உள்ள அசோவ் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரம் இன்று (02) நண்பகலில் குறிவைக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி  விளாடிமிர் ரோகோவ் கூறினார்.

இந்த தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியாவில் “வி ஆர் டுகெதர் வித் ரஷ்யா” என்ற மாஸ்கோ சார்பு அமைப்பை வழிநடத்தும்  ரோகோவ், துறைமுகப் பகுதிக்கு அருகில் இருந்து சாம்பல் புகை வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

வீடியோவின் இடம் பெர்டியன்ஸ்க் என அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால் காட்சிகளின் திகதியை சரிபார்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Exit mobile version