குவைத்தில் 2011ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஒகஸ்ட் மாதத்திற்கு இடையில் இரட்டை குடியுரிமை கொண்ட 10,000 க்கும் மேற்பட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண குவைத்தின் தசாப்த கால முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.
மேலும் சட்டவிரோதமாக குவைத் குடியுரிமை பெறுபவர்களை ஒடுக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குவைத் இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை, மேலும் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர்கள் 18 வயதை எட்டிய இரண்டு ஆண்டுகளுக்குள் குவைத் தேசியம் மற்றும் அவர்களது பிற தேசத்தை தேர்வு செய்ய வேண்டும்.
குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சவுதி, ஈராக், சிரியா, ஈரானிய மற்றும் ஜோர்தானிய நாட்டினர் என தெரியவந்துள்ளது.
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் நிலையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை சமீப ஆண்டுகளில் முடுக்கிவிட்டுள்ளது.