Site icon Tamil News

குருந்தூர்மலை விவகாரம்!! நீதிபதி மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி, குருந்தூர் மலையில் பொங்கல் விழாவை நடத்த அனுமதித்ததன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பௌத்தர்களின் மனங்களுக்கு எதிராக செயற்படுவதும் அவர்களைத் தூண்டிவிடுவதும் தண்டனைக்குரிய விடயம் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி கூறியுள்ளார்.

இவரது வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு நீதவான் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு சிங்களவர்களாகிய நாம் உதவுவோம்.

அப்படிப்பட்டவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியுமா? சரியான முடிவு எடுக்க முடியாத ஒருவரின் தீர்ப்பை எப்படி ஏற்க முடியும்?

இந்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன்வைக்கிறோம்.

நல்ல கொள்கையும் நல்லொழுக்கமும் கொண்ட தமிழரை நீதிபதியாக நியமிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version