Site icon Tamil News

கனடாவின் Montreal நகரில் கத்திக்குத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

கனடாவின் நகரமான மாண்ட்ரீலுக்கு மேற்கே உள்ள காண்டோமினியம் கோபுரத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் உள்ள Vaudreuil-Dorion பகுதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்   கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட நபர்களுக்கும், சந்கேகநபருக்குமான தொடர்பு குறித்த விவரங்களை பொலிஸ் அதிகாரிகள் வெளியிடவில்லை.

இருப்பினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version