Site icon Tamil News

கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நேற்று முன்தினம் கே. எல். ராகுல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் அறிவிப்புக்காக காந்திருந்த இரசிகர்கள்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு பதிவு வெளியானது.

அதாவது கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இணையதளத்தில் உலாவரும் இப்பதிவு போலியானது என்றும் வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை எடுத்து கே. எல். ராகுலின் பெயரை மாற்றி வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version