Site icon Tamil News

ஏலத்தில் தவறுதலாக வாங்கப்பட்ட வீரர்!!! அதிரடியாக விளையாடி தன்னை நிரூபித்த வெற்றியாளன்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (04) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இடம்பெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தவறுதலாக பஞ்சாப் உரிமையாளர்களால் வாங்கப்பட்ட ஷஷாங்க் சிங், நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்த வீரராக மாறியிருந்தார்.

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது பஞ்சாப் அணியால் ஷஷாங்க் சிங் என்ற பெயரில் இரு வீரர்கள் இருந்ததாகவும், மற்றைய வீரரை வாங்குதவற்கு பதிலாக நேற்றையப் போட்டியில் விளையாடி ஷஷாங்க் சிங் என்பவரை ஏலத்தில் எடுத்ததாகவும் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஏலத்தில் தவறுதலாக பஞ்சாப் உரிமையாளர்களால் வாங்கப்பட்ட ஷஷாங்க், நேற்றைய ஆட்டத்தில் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை குவித்தார்.

200 என்ற கடினமாக இலங்கை துரத்தி அடித்த பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஷஷாங்க் சிங் கைகொடுத்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version