Site icon Tamil News

தன் மகளுடன் மீண்டும் பொதுவெளியில் தோண்றிய கிம்!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது மகளுடன், இராணுவ செயற்கை கோள் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்.

செயற்கைகோள் நிலையத்தை பார்வையிட்டப் பின்னர், அதிகாரிகளுடன் கலந்துரையாடிய புகைப்படங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் முதல் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த கடந்த மாதம் கிம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருப்பினும் இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version