Site icon Tamil News

இலங்கையில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரிப்பு!

இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய சிறுவர் அதிகாரசபை என்ற அடிப்படையில் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரசபையின் தலைவர் பாதிக்கப்பட்டவர் பௌத்தமகுருவா அல்லது சாதாரண நபராக என நாங்கள் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version