Site icon Tamil News

கொக்கைன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கைன் (Cocaine)  போதைப்பொருளுடன் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பிரஜை, 04 கிலோ கிராம் Cocaine போதைப்பொருளை  கொண்டுவந்திருந்தாக கூறப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபா என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version