Tamil News

கண்டி எசல பெரஹெர நிறைவு: மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

கண்டி எசல திருவிழாவை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கும் வைபவம் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

கண்டி எசல பெரஹெரா விழாவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, பங்குபற்றிய கலைஞர்கள் ஜனாதிபதியினால் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version